சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை செய்த சுரேஷ் (28) என்பவர், வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில் டோர் டெலிவரி செய்வதாகக் கூறி, விலை உயர்ந்த பட்டுப் புடவைகளை திருடி வெளியே விற்றுள்ளார். பணத்தைப் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், சக ஊழியர்கள் இருவர் அவரை போலீசில் சிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.