சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மாநகராட்சி பள்ளி அருகே தனியார் உணவக உழியாரான இளம்பெண் ஒருவர் தனது தோழியுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியே வந்த ஆழ்வார்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவரான விக்னேஷ்வரன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இளம்பெண் அளித்த புகாரின் பேரில், அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ்வரனை கைது செய்தனர்.