அயனாவரம் நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த தீனதயாளன் (45) என்பவரிடம், அவரது நண்பர் அப்துல் கரீம் (47) அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை காட்டி, முதல் கட்டமாக ரூ. 9 லட்சத்தை பாபு என்பவரிடம் பெற்றுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட பாபு, வீட்டையும் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இது குறித்து தீனதயாளன் அளித்த புகாரின்பேரில், அயனாவரம் போலீசார் அப்துல் கரீமை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.