சென்னை பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி 4 நாட்கள் ஆய்வு மேற்கொண்ட பிறகு பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை இந்த வழித்தடத்தில் தொடங்கப்பட உள்ளது. இந்த அனுமதி, பயணிகளுக்கு ஒரு புதிய சகாப்தத்தை தொடங்குவதாக அமைந்துள்ளது.