வருகின்ற 8-ம் தேதி டெல்லியில்
காங்கிரஸ் பங்கேற்கும்
இந்தியா கூட்டணி கூட்டத்தில்
திமுக பங்கேற்காது என
திமுக அறிவித்துள்ளது.
இந்தியா கூட்டணி தொடங்கியதில் இருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக
திமுக இயங்கியது என்றும், நாட்டு மக்களுக்கான முக்கிய பிரச்சனைகளில்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் குரல் தான் முதன்மை குரலாக இருந்தது என்றும்
திமுக தெரிவித்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்காத அதே நேரத்தில், இதில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனை பாதிக்கும் பிரச்சினைகளில்
திமுக என்றைக்கும் குரல் கொடுக்கும் என்றும்
திமுக கூறியுள்ளது.