மதுரை, விளாங்குடியைச் சேர்ந்த பரத்சித்தன்(25) என்பவர், திருமங்கலத்தில் உள்ள தனியார் மதுக்கூடத்தில் கடந்த 5ஆம் தேதி மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு சத்தம் போட்டுக் கொண்டிருந்த நான்கு பேரை கண்டித்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் பரத்சித்தனை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக திருமங்கலம் போலீசார் குப்பன், ரமேஷ் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.