கோடம்பாக்கம் மண்டலம் நெசப்பாக்கம், பாலாஜி நகர் ருக்மணி தெருவில் தெரு நாய்கள் தொல்லை மற்றும் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குழந்தைகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்தி கடிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சியிடம் பலமுறை ஆன்லைன் மற்றும் உதவி எண் வாயிலாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர். தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.