சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து சென்னை மாவட்டத்தில் 29.03.2025 சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நந்தனம் அரசு கலைக் கல்லூரி (Government Arts College, Nandanam) வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
20,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியவை மேற்கொள்ளப்படும். 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல், கணினி இயக்குநர்கள், தையல் கற்றவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இலவசம். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சென்னை என்ற முகவரியிலும், www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் Candidate log-இல் தங்களது சுய விவரங்களை முன்பதிவு செய்யவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.