சென்னையில் இன்று (மே 20) செய்தியாளர்களை சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளை அமைச்சரவையில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் பங்கேற்க முதல்வர் வலியுறுத்தியுள்ளார் என்றும் கூறினார். விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறிய அவர் பின்வாசல் வழியாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க முயன்றதாக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.