பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை இயக்குவதற்கான இறுதி ஆய்வு நாளை முதல் தொடங்குகிறது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ. எம். சவரி, மூன்று நாட்களுக்கு இந்த ஆய்வை மேற்கொள்வார். பிரேக்கிங் தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்து அவர் ஆய்வு செய்வார். மெட்ரோ ரயில் மணிக்கு 80-90 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்படும்.