பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார். இதனால் வரும் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் மீனம்பாக்கம் மற்றும் கிண்டி பகுதிகள் காவல்துறையால் 'சிவப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி வரும் 28 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அவரது வருகை மற்றும் தங்கும் இடங்களில் சென்னை பெருநகர காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.