கர்நாடகாவில் காட்பாடி சந்திப்பு நிலையத்தில், 24 வயது கல்லுாரி மாணவி ரயிலின் முன்பதிவில்லாத பெட்டியில் ஏறியுள்ளார். ரயில் கிளம்பிய சிறிது நேரத்தில், அதே பெட்டியில் பயணித்த 45 வயது நபர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தபோது, அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் அரக்கோணத்தைச் சேர்ந்த முத்துவேல், 45, என்பதும், ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் மளிகை கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.