சென்னை தரமணியில் உள்ள தனியார் கல்லூரியில் இதழியல் படிக்கும் மேற்கு வங்க மாணவி, விடுதிக்கு நடந்து சென்றபோது மதுபோதையில் இருந்த நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். மாணவியின் தோழிகள் இருவரும் சேர்ந்து அந்த நபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து கோட்டூர்புரம் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு நடந்துள்ளது.