திருமங்கலம், வடக்கு பிரதான சாலையில் நேற்று போதைப்பொருள் தடுப்பு போலீசார் நடத்திய சோதனையில், சந்தேகத்திற்கிடமான முறையில் பைக்கில் நின்ற சூர்யா(24) மற்றும் மாதவன்(21) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் போதைக்கு பயன்படுத்தப்படும் உடல்வலி நிவாரண மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பாரிவாக்கத்தை சேர்ந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.