செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 22 அடியாக எட்டியதால், வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரியின் தற்போதைய நீர்மட்டம் 24 அடியில் 21.96 அடியாக உயர்ந்துள்ளது. ஏரியிலிருந்து வினாடிக்கு 1350 கன அடி நீர் வெளியேறி வருகிறது. மேலும், நீர் வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.