சென்னையிலிருந்து கோலாலம்பூர் செல்லவிருந்த விமானத்தில், மலேசிய குடியுரிமை பெற்ற இந்தியர்களான நந்தகுமார் (35) மற்றும் பிரசாந்த் (36) ஆகிய இரு பயணிகள் அடிதடியில் ஈடுபட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால், விமானப் பயணம் ஒன்றரை மணி நேரம் தாமதமானது. இருவரின் பயணமும் ரத்து செய்யப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.