செல்வப்பெருந்தகையின் மகளின் திருமண விழாவில் முதலமைச்சர் பங்கேற்பு

45பார்த்தது
செல்வப்பெருந்தகையின் மகளின் திருமண விழாவில் முதலமைச்சர் பங்கேற்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். சென்னை மாமல்லபுரம் அருகே இன்று (மார்ச் 03) நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.