கருப்பைவாய் புற்றுநோயை தடுக்கும் வகையில் HPV தடுப்பூசி திட்டம் இன்று (ஜன.27) தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக தர்மபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 14 வயதுடைய 30,209 மாணவிகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வரும் நாட்களில் 3,38,649 பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.