மேகதாது அணை விவகாரம் தொடர்பாக
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஜோசப்
விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதில், ''காவிரி படுகையில் அமைந்துள்ள மாநிலங்களின் ஒப்புதலைப் பெறாமல் எந்தவொரு திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எவ்வகையிலும் கர்நாடகா மீறக்கூடாது என கர்நாடக அரசுக்கு
பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நாளை (மே 27) டெல்லியில்
பிரதமர் மோடியை முதலமைச்சர்
விஜய் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி: News18