மத்தியப் பிரதேச மாநிலத்தில், 'கோல்ட்ரிப்' என்ற இருமல் மருந்தை சாப்பிட்ட 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஸ்ரீசென் பார்மா என்ற மருந்து நிறுவனம் மூலம், 'கோல்ட்ரிப்' மருந்துகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து தயாரித்த ஆலைக்கு தமிழக அரசு இன்று (அக்.8) சீல் வைத்துள்ளது.