மராட்டிய மாநிலம் சாங்கிலியில் கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.252 கோடி எம்.டி. போதைப்பொருள் வழக்கில், துபாய் கும்பலின் முகமது சலீமை மும்பை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து முக்கிய இந்தி நடிகர், வில்லன் நடிகரின் மகன், பணமோசடி வழக்கில் சிக்கிய நடிகை–மகள், இயக்குனர், ராப் பாடகர்கள், தாவூத் கும்பல் உறுப்பினர்கள், முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்டோருக்கு சலீம் போதை விருந்துகள் ஏற்பாடு செய்ததும் கண்டறியப்பட்டது.