சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய அசைவ உணவில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டபோது, அவர்கள் முறையான பதில் அளிக்காததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உணவு பாதுகாப்பு துறையினர் சுகாதாரமற்ற முறையில் இயங்கும் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.