
கோயம்புத்தூர்
கோவை: ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
29/01/2026 அன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ, டாக்ஸி மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்வு, சட்டவிரோத பைக் டாக்ஸி தடை, ஓலா, உபர், ரேப்பிடோ போன்ற நிறுவனங்களை முறைப்படுத்துதல், மேக்சி கேப் உரிமையாளர்களுக்கு சீட் பர்மிட் உயர்வு, சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தடை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

























