கோவை ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, ராஜவீதி ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் நடத்தப்பட்டதாக புகார் வந்தது. இதையடுத்து மத்திய மண்டல நகரமைப்பு அதிகாரிகள் அது போன்ற கடைகளை நேற்று ஆய்வு செய்து, ஐந்து கடைகளுக்கு மொத்தம் ரூ. 5, 500 அபராதம் விதித்தனர். இதேபோன்று தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.