கோவை சூலூர் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வி. பி. கந்தசாமி, நேற்று தனது சொந்த ஊரில் பிரச்சாரத்தை தொடங்கினார். மாகாளி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து மக்களிடம் வாக்கு சேகரித்தார். ஆதரவளித்த மக்களுக்கும், கட்சித் தலைமைக்கும் நன்றி தெரிவித்த அவர், உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்கினார். இதனால் குடும்பத்தினரும், பொதுமக்களும் நெகிழ்ச்சி அடைந்தனர்.