பொள்ளாச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாவட்ட செயலாளர் பட்டீஸ்வரன், சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்து வருவதாகவும், சிங்கப் பெண் திட்டம் செயல்படுகிறதா என கேள்வி எழுப்பினார். தவறு செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கவும், தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்ற முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தினார்.