கோவை கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் வின்சென்ட் (65) என்ற முதியவர், சிறுவன் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர், கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில், அவர்மீது நேற்று குண்டர் தடுப்பு சட்டம் மேற்கொள்ளப்பட்டு, சிறையில் அவருக்கான உத்தர நகல் வழங்கப்பட்டது.