கோவை TIPS பள்ளியின் 65, பத்தாம் வகுப்பு மாணவர்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி துறையை இன்று பார்வையிட்டு, விவசாயத்தின் எதிர்காலத்தை உருவாக்கும் அறிவியலின் அதிசயங்களை கண்டனர்.இந்த மாணவர்கள், தாவர உயிரி தொழில்நுட்பத்தில் சமீபத்திய முன்னேற்றங்கள், தாவர திசு வளர்ப்பு முறை, ஜி. சி-எம். எஸ் போன்ற மேம்பட்ட உபகரணங்களின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை நேரில் கண்டனர்.
துறை தலைவர் டாக்டர் ஈ. கோகிலாதேவி, நடந்துகொண்டிருக்கும் திட்டங்களை எளிமையாக விளக்கி, மாணவர்களுக்கு விவசாயத்தில் அறிவியலின் பங்கு குறித்து தெளிவான புரிதலை ஏற்படுத்தினார். இந்த நிகழ்வு, மாணவர்களுக்கு விவசாய உயிரி தொழில்நுட்பத்தில் நேரடி அனுபவத்தை அளித்து, அவர்களில் அறிவியல் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அடுத்த தலைமுறை விஞ்ஞானிகளை உருவாக்கும் வகையில், கல்வியை நடைமுறைப் பயிற்சியுடன் இணைக்கும் இந்த முயற்சி பாராட்டுகளை பெற்றுள்ளது.