கோவை மாவட்டம் சூலூர் பாரதிபுரத்தில் திமுக வேட்பாளர் தளபதி முருகேசன் நேற்று இரவு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்களும் பெண்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து ஆரத்தி எடுத்தனர். பிரச்சாரத்தின் போது, திமுக ஆதிதிராவிடர் காலனிக்கு புதிய அடையாளம் கொடுத்ததாகவும், பெண்களுக்கு ₹1000 உதவித்தொகை வழங்கியதோடு, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதை உயர்த்துவோம் என்றும் உறுதியளித்தார். பொதுமக்கள் மற்றும் கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.