கோவை: குப்பை கொட்டிய தகராறு விபரீதம்: மூதாட்டி வெட்டிக்கொலை
கோவை ஆலாந்துறை அருகே குப்பை கொட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 72 வயது ஜெசி என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அண்டை வீட்டுக்காரரான நோபிள் வாட்சன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காருண்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நோபிள் வாட்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
