கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன், அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து வருபவர்களை தவெகவில் சேர்க்கும் முயற்சிகள் நடப்பதாக வரும் விமர்சனங்கள் நல்ல அறிகுறி அல்ல என்றார். தவெக தலைமையினர் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கக் கூடாது என்றும், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும், பெரம்பலூரில்
திமுக-விசிக இடையே ஏற்பட்ட மோதல் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.