கோவை கிளை தலைவர் சுர்வஜித் எஸ் கிருஷ்ணன் தலைமையில், இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் சார்பில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிஎ தேர்வில் தேர்ச்சி பெற்ற 110 பேருக்கு பட்டங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பட்டயக் கணக்காளர் படிப்பிற்கான வரவேற்பும் வேலைவாய்ப்பும் அதிகரித்து வருவதாகவும், ஏஐ, மெஷின் லேர்னிங், பிளாக் செயின் போன்ற புதிய தொழில்நுட்பங்களை இளம் சிஎ-க்கள் கற்றுக்கொள்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.