கோவை அரசு மருத்துவமனை அருகே லங்கா கார்னர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜதுரையிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ராஜதுரை (23) அளித்த புகாரின் பேரில் ரேஸ் கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோவையைச் சேர்ந்த முஸ் மில்கான் (20), கார்த்திக் (22) ஆகியோர் தொடர்புடையவர்கள் என தெரியவந்ததையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.