கோவை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் ராமநாதபுரம் மின் மயானம் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக நின்ற
சூர்யா (21) மற்றும் அபூபக்கர் சித்திக் (30) ஆகியோரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் இருந்து 1,100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.