துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (செவ்வாய்க்கிழமை) கோவைக்கு வருகை தர உள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மாவட்டம் ஒன்னிபாளையம் கருப்பராயன் கோவில் அதனை சுற்றியுள்ள பகுதிகள், முக்கிய விருந்தினர் பயணிக்கும் சாலைகள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று (நவம்பர் 04)இரவு 8 மணி வரை இந்தப் பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.