கோவை: காதல் பிரேக் அப்- பெட்ரோல் குண்டு வீச்சு: வலைவீச்சு

1பார்த்தது
கோவை தொண்டாமுத்தூர் அருகே கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில், இன்ஸ்டாகிராம் காதலை முறித்ததால் ஆத்திரமடைந்த சென்னை ரவுடி கார்த்தி என்கிற மாரியப்பன் (30), தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் நிரப்பிய பீர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் வாசலில் இருந்த காலணி ஸ்டாண்ட் தீப்பற்றியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. திண்டுக்கல்லில் குண்டாஸ் வழக்கில் சிறை சென்ற கார்த்தி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது 3 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி