கோவை: மூதாட்டியை குத்திக் கொன்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

8பார்த்தது
கோவை: மூதாட்டியை குத்திக் கொன்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
கோவை பீளமேடு பகுதியில் மூதாட்டி கண்ணியம்மாளை மது பாட்டிலால் குத்திக் கொன்ற வழக்கில், குற்றவாளி கார்த்திக்கிற்கு கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 2, 500 அபராதமும் விதித்தது. 2020ஆம் ஆண்டு உறவினரான தர்மராஜுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கார்த்திக் அவரை குத்தியபோது, தலையிட்ட பாட்டி கண்ணியம்மாளையும் மது பாட்டிலால் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. வழக்கு விசாரணை முடிவில் நேற்று முன்தினம் நீதிபதி குற்றம் நிரூபணமானதாக கூறி தண்டனை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி