கோவை: ராட்சத குடிநீர் குழாய் உடைந்து வெள்ளப்பெருக்கு!

2பார்த்தது
கோவை சக்தி சாலை–சரவணம்பட்டி சந்திப்பில் நேற்று பெரிய குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால் அருகிலுள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டனர். குழாயை சரிசெய்ய வந்த ஜே.சி.பி. எந்திரம் பள்ளத்தில் கவிழ்ந்தது. மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் குடிநீர் வடிகால் துறை அதிகாரிகள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குழாய் பழுது நீக்கி குடிநீர் விநியோகம் சீராக வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி