கோவையில் ஆவின் பால் முகவர்கள், புதிய செயலி மற்றும் ஆன்லைன் கட்டண முறையால் ஏற்படும் சிரமங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். செயலி கோளாறால் பால் ஆர்டர்கள் தவறாக பதிவு செய்யப்படுவது, கமிஷன் தாமதம், 2% பிடித்தம், ஈசி பே செயல்படாதது போன்ற பிரச்சினைகள் தொடர்வதாக முகவர்கள் தெரிவித்தனர். பழைய செயலியை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரவும், நேரடி பணப் பரிவர்த்தனையை தொடரவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.