
கோவை: யானைகள் மோதல்: ஆண் காட்டு யானை உயிரிழப்பு
பில்லூர் அணை வனப்பகுதியில், தண்ணீர் குடிக்க வந்த இரண்டு ஆண் யானைகள் இடையே ஏற்பட்ட திடீர் மோதலில், படுகாயமடைந்த ஒரு ஆண் யானை நேற்று உயிரிழந்தது. மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கீழ் பில்லூர் பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர், காயங்களுடன் இறந்து கிடந்த யானையை கண்டறிந்தனர். இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


































