போத்தனூர் மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் நேற்று நடந்த இரண்டு தனித்தனி சம்பவங்களில், குடும்பப் பிரச்சனையால் மனமுடைந்த ஐ.டி. ஊழியர் கவுசிக் (37) மற்றும் திருமணம் ஆகாததால் மன உளைச்சலில் இருந்த ஆட்டோ டிரைவர் ராதா முகேஷ் (32) ஆகியோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த இரு சம்பவங்கள் குறித்து போத்தனூர் மற்றும் சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.