கோவை எல். என். டி பைபாஸ் சாலையில் ஈச்சர் லாரி மோதிய விபத்தில் காயமடைந்த செந்தில்குமார், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருமணமான அவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். பாஜக மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாவட்டத் தலைவர் கருமாரிமுத்து ஆகியோர் நேற்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சாலை விரிவாக்கம் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.