கோவை பீளமேட்டில் உள்ள
பாஜக மாவட்ட அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் பி. எல். சந்தோஷ் தலைமையில் மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன், எல். முருகன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தேர்தலுக்குப் பின் அதிமுக-
பாஜக உறவு அமைதியாக இருப்பதாகவும், அதிமுகவில் உள்கட்சிப் பிரச்சினை நிலவுவதால் அதுகுறித்து கருத்து கூற முடியாது என்றும் தெரிவித்தார்.