கோவை மாவட்டம் காரமடையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிய 17 வயது சிறுவன் உட்பட இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். கண்ணார்பாளையம் சாலையைச் சேர்ந்த சரவணகுமாரின் மோட்டார் சைக்கிள் கடந்த 29ஆம் தேதி திருடப்பட்டது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்திய காரமடை போலீசார், அவிநாசியைச் சேர்ந்த சரவணா (19) மற்றும் சிறுவனை பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.