கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ், காளீஸ்வரன், குணா ஆகிய மூவரின் புகைப்படங்களை காவல்துறை இன்று வெளியிட்டது. நவம்பர் 2 அன்று பிருந்தாவன் நகர் பகுதியில் மாணவி மீது வன்கொடுமை நடந்தது. சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் 24 மணி நேரத்திற்குள் போலீசார் மூவரையும் துடியலூரில் கைது செய்தனர். மேலும், இந்த மூவரும் அதே நாளில் அன்னூரில் ஒரு ஆட்டு வியாபாரியையும் கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாலியல் வன்கொடுமை, கடத்தல் உள்ளிட்ட 13 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 50 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.