கோவை நகரில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் போத்தனூர், வெள்ளலூர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் வாகனங்கள் திருடப்பட்டன. நேற்று நள்ளிரவில் வடவள்ளி சிறுவாணி சாலை சித்தி விநாயகர் கோவில் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் கள்ளச்சாவி பயன்படுத்தி திருடிச் சென்றார். இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.