பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, கருமத்தம்பட்டி நகர கழகம் மற்றும் கோவை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நேற்று (பிப்ரவரி 3) கருமத்தம்பட்டியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நகரக் கழக நிர்வாகிகள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஆகியோர் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.