கோவை: பள்ளி ரீபண்ட் தொகை வழங்கவில்லை என புகார்!

2பார்த்தது
கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி, FIITJEE நிறுவனத்துடன் இணைந்து நடத்திய நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களிடம் வசூலித்த ஒரு லட்சம் ரூபாய் ரீஃபண்ட் தொகையை 262 மாணவர்களுக்கு திருப்பித் தரவில்லை. பிப்ரவரி மாதம் வகுப்புகள் முடிந்தும், ₹2.62 கோடி தொகை வழங்கப்படாததால், 50-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து, பணத்தை மீட்டுத் தரக் கோரியுள்ளனர். பள்ளி நிர்வாகம், FIITJEE நிறுவனம் தனியாக செயல்படுவதாகவும், தங்களுக்கு சம்பந்தமில்லை என்றும் கூறியதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி