கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீரென சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். பணி முடிந்து வீடு திரும்புவோர், இருசக்கர வாகன ஓட்டிகள் பாலங்கள் அருகே தஞ்சம் புகுந்தனர். பல முக்கிய சாலைகளில்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன.