கோவை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் புகையில்லா போகிப்பண்டிகையை பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர் இன்று அறிவுறுத்தியுள்ளார். நெகிழி, டயர், ட்யூப், ரசாயனம் கலந்த பொருட்களை எரிப்பதால் காற்று மாசுபாடு, போக்குவரத்து சிக்கல், விபத்துகள் மற்றும் உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார். எனவே, இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை எரிக்காமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி போகிப்பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.